இது தான் நட்பின் ரகசியமோ?
என் கணவரின் நண்பர் நெடு நாட்களுக்கு பிறகு போன் பண்ணியிருந்தார்.நலம் விசாரித்ததோடு, வேலை எல்லாம் எப்படி போயிகொண்டிருக்கிறது என என் கணவர் கேட்டார்.
நான் இப்போது வேலையை விட்டு விட்டேன்,சினிமா புரொடியூஸ் பண்ணலாம் என இருக்கிறேன். அதற்கு 2 கோடி எஸ்டிமேட் போட்டிருக்கேன்.உங்களுக்கு என்ன தோன்றுகிறது என என் கணவரிடம் கேட்டார். என் கணவரும் நல்ல யோசனை தான்,எனக்கு இது பற்றி அனுபவம் இல்லை. உனக்கு எதாவது உதவி வேண்டும் என்றால் என்னிடம் கேள் என சொன்னார்.
எப்படி அவ்வளவு பணம் புரட்டுவான்,அதுவும் சினிமா வெற்றியடையவில்லையென்றால் என்ன பண்ணுவான் என என் கணவரிடம் கேட்டேன். நீங்க அவனை படம் புரொடியூஸ் பண்ணுவதை பிறகு பாத்துக்கலாம், ஒழுங்கா வேலைக்கு போ என திட்டி புத்தி சொல்லியிருக்கலாமே என் கேட்டேன். அதற்கு அவர் சொன்ன பதில் என்னை சற்று சிந்திக்க வைத்தது.
அவனுக்கு என்ன தோணுதோ அதை அவன் செய்யட்டும், நாம் தடுக்க வேண்டாம். நம்மால் முடிந்த உதவியை செய்வோம் என என் கணவர் சொன்னார்.
உடனே நான் "அப்ப படம் சரியா ஓடலேன்னா .......... "என்றேன். உடனே என் கணவர் "படம் சரியா ஓடிச்சுதுன்னா................."என்றார் சிரித்த படியே.
அவர் கூறியவைகள் என்னை 3 விதமா யோசிக்க வைத்தது.
1. எதையும் Positive-ஆக யோசிக்க வேண்டும்.
2. நண்பனுக்கு உதவ வேண்டும்.
3. நண்பனின் கருத்தை மதிக்க வேண்டும்.
உடனே நான் என் கணவரிடம் சொன்னேன், உங்களுக்கு நிறைய நல்ல நண்பர்கள் இருப்பதற்கு இது தான் காரணமோ என்றேன் சிரித்துக்கொண்டே.
பெயரில்லா posted on 14/9/09 8:18 PM
நல்ல பதிவு
பெயரில்லா posted on 15/9/09 6:16 AM
nalla sinthanai, nadpin ragasiyam tharinthugondan thx
பெயரில்லா posted on 15/9/09 6:18 AM
nalla sinthanai, nadpin ragasiyam tharinthugondan thx
கருத்துரையிடுக
பிடித்தால் ஓட்டு போட்டு பிரபலமாக்குங்கள்! படித்தால் பின்னூட்டமிட்டு ஊக்கமளியுங்கள்!!