சனி, 24 டிசம்பர், 2011

பிஞ்சு மனதில் மதத்தை விதைக்கலாமா?

எங்க பக்கத்துவீட்டுப் பொண்ணு நாலாம் வகுப்பு படிக்கிறாள்.இன்று காலை  ஒரு ஸ்டார் கொடுத்து கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை பகிர்ந்துகொண்டாள். எங்கள் வீட்டு கிறிஸ்துமஸ் அலங்காரங்களைப் பார்த்து ரொம்பவே ரசித்தாள். அவள் தந்த ஸ்டாரையும் கட்டி அழகுப் பார்த்தாள்.
 அவள் ஆர்வத்தைப் பார்த்து, இந்த ஸ்டாரை உன் வீட்டிலேயே கட்டியிருக்கலாமே என்றேன்.வீட்ல கட்டுவதற்குத் தான் வாங்கினேன்; ஆனால் கிறிஸ்துமஸ் முடியறது வரைக்கும் கட்டக்கூடாது.அப்புறமா கட்டிக்கோ என் அம்மா சொன்னாங்க; கிறிஸ்துமஸ் முடிஞ்சதுக்கப்பறம் எனக்கு கொடுங்க என்றாள்.
எனக்கு அவளோட அம்மா மேல அப்படி ஒரு கோபம் வந்தது. அது ஒண்ணும் பிரச்சினை இல்லை யார் வேண்டுமானாலும் கட்டலாம் என்றேன். அவள் சிரித்தாள்.
பெற்றோரே இப்படிப்பட்ட நிகழ்வுகள் மதவாத்தை வளர்க்கலாம்.ஆனால் கண்டிப்பாக மனிதநேயத்தை வளர்க்காது.

புதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு