திங்கள், 28 செப்டம்பர், 2009

நீங்களே வீட்டில் வேக்ஸிங் செய்து கொள்ளலாம்.

இன்று பெண்கள் Vaxing செய்ய அழகு நிலையங்களுக்ககு செல்கின்றனர். இந்த முறையை நீங்கள் வீட்டிலேயே செய்துகொள்ளலாம். இதனால் பணம்,நேரம் மிச்சம் செய்துகொள்ளலாம்.
இப்போது Vaxing செய்வது எப்படி என பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
சர்க்கரை ----- 1 Cup
எலுமிச்சப்பழ சாறு-------- அரை கப்
செய்முறை:
அடிக்கனமான பாத்திரத்தில் சர்க்கரையையும்,எலுமிச்சப்பழசாறயும் கலந்து குறைவான தீயில் கொதிக்க விடவும்.கூடவே ஒரு தட்டையான கரண்டியால் கிளறி கொண்டே இருக்கவும். கலவை கெட்டி ஆகி Brown கலரில் வரும் போது இறக்கவும்.
இந்த கலவயை அலுமினியம் அல்லது ஸ்டீல் பாத்திரத்தில் ஊத்தி வைக்கவும். ஆறியதும் நன்றாக கெட்டியாகும். இக்கலவையை Fridge-ல் வைக்ககூடாது.வெளியே அறை வெப்பநிலையில் வைத்து ஒரு ஆண்டு வரை பயன்படுத்தலாம்.
Vaxing பண்ணுகிற நேரத்தில் சிறிதளவு கெட்டியான வேக்ஸ்யை எடுத்து ஒரு ஸ்டீல் பாத்திரத்தில் போட்டு,ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊத்தி அதனுள் வேக்ஸ் பாத்திரத்தை வைத்து Vax உருகும் வரை சூடு பண்ணவும்(Second boiling Method). இப்போது Vax Ready.
Vaxing strips கடைகளில் கிடைக்கிறது அல்லது பழைய காட்டன் துணிகளை கூட பயன்படுத்தலாம்.
எங்கு வேக்ஸ் பண்ணவேண்டுமோ அந்த இடத்தில் vax யை திக்கான,தட்டையான ஸ்டீல் ஸ்டிக் பயன்படுத்தி தேய்க்கவும்.அதன் மீது vaxing strip யை வைத்து லேசாக அழுத்தி தேய்க்கவும்.
பிறகு முடி வளர்ச்சிக்கு opposite -ல் strip யயை பலமாக இழுத்து எடுக்கவும்.இப்போது முடிகள் vax உடன் சேர்ந்து strip ல் வந்துவிடும்.
இதே முறையை பயன்படுத்தி கை,கால்,முகம் போன்றவற்றில் உள்ள ரோமங்களை அகற்றலாம்.
தோலில் எரிச்சல் ஏர்பட்டால் சிறிது வெள்ளரி சாறு தடவவும்.
எண்ணெய் பசை தோல் என்றால் வாக்ஸ் போடுவற்கு முன்னால் சிறிது பவுடர் தேய்க்கவும்.
வேக்ஸ் பதம் சரியில்லை என்றால்
1 vax தேய்க்கும் போது தோலில் ஒட்டாமல் சுருண்டு வரும்,அப்படி இருந்தால் வாக்ஸுடன் சிறிது தண்ணீர் சேர்த்து தண்ணீர் வாக்ஸுடன் கலரும் வரை அடுப்பில் வைத்து சூடு பண்ணவும்.
2 வேக்ஸ் தோலில் ஒட்டும், ஆனால் இழுக்கும் போது துணியில் ஒட்டாது. அப்படி இருந்தால் இன்னும் சிறிதளவு அடுப்பில் வைத்து சூடு பண்ணவும்.

வியாழன், 24 செப்டம்பர், 2009

இதற்காகத் தான் பிறந்தோமா?

மனதை பதறவைக்கும் இந்த VIDEO-வை மன தைரியமுடைவர்கள் மட்டும் OPEN பண்ணவும்.

மனித உயிர் மகத்தானது.

*உன்னை பெற்றவள் என்ன

பாவம் செய்தாள்

இந்த கோலத்தில் பார்ப்பதற்கு?

*உன் உயிர் மூச்சு

ஒரு நொடியில் அடங்கி போயிற்று

ஆயிரம் கண் முன்னாலே

*உன் ஒரு கோடி கோபங்கள்

ஒரு நொடியில்

அடங்கினவா?

*ஆசைகள் பல கோடி

உன்னுள்ளே இன்னும்

அடங்காமல் துடிக்கிறதெ

அது உனக்கு தெரிகிறதா?

செவ்வாய், 15 செப்டம்பர், 2009

மணமகள் தேவை

குறைவாக படித்து, அதிகம் சம்பாதிக்கும், தலைக்கனம் பிடித்த என் ஓரே மகனுக்கு மணமகள் தேவை.
1 பெண் கண்டிப்பாக உயர் படிப்பு படித்தவளாக இருக்கவேண்டும்.
2 வீட்டிற்கு ஓரே பெண்ணாக இருக்கவேண்டும்.
3 திருமணத்திற்கு பிறகு வேலைக்கு போகக்கூடாது.
4. திருமணத்திற்கு பிறகு பெற்றோரை மறந்து விட வேண்டும்.
5. எல்லாவற்றுக்கும் தலை ஆட்டுபவளாக இருக்கவேண்டும்.
6. அம்மா,அப்பாவுக்கு பிடித்த சமையல் சமைக்கத் தெரிந்தவளாக இருக்கவேண்டும்.(பாவம் அவங்க Sugar,BP எல்லாம் இருக்கு!)
7. நான் இரவு 12 மணி , 1 மணிக்கு தான் வருவேன். அதுவரைக்கும் தூங்காம
முழிச்சிருகணும்.
8. நான் தண்ணி அடிச்சிட்டு வந்தாலும் ஏன் என கேட்கக்கூடாது.
9. வந்த உடனே டயர்டா தூங்கிவிடுவேன்.
10. உனக்கு என்ன தேவையோ எல்லாம் வாங்கி தருவேன்.
11.பக்கத்து வீட்ல பேசக்கூடாது.
12.மொபைல் வாங்கி தருவேன்,ஆனா நீ பேசக்கூடாது,Monthly Bill வந்திரும்.
13.வெ`ளியே போனா எப்பவாவது 7 seconds பேசுவேன். நான் ரொம்பவே busy.
14. வீட்ல TV பாரு. ஆனா EB Bill ஏறாம பாத்துக்கணும்
15. Intenet Connection உண்டு, ஆனா அரை மணி நேரத்துக்கு மேல் browse பண்ணக்கூடாது. charge ஏறாம பத்துக்கணும்.
16. குறிப்பா E-mail அனுப்பக்கூடாது.
17.படிச்சத எல்லாம் மறந்துக்கணும்.
18.வீட்டு வேல எல்லாம் செய்யணும்.
19. எனக்கு கை கால் பிடிச்சு விடணும்.
20. நான் friends கிட்ட மணிக்கணக்கா பேசுவேன். எதுவும் சொல்லலக்கூடாது.
21. நான் ரொம்பவே முன் கோபி,கோபம் வந்தா கன்னத்துல அடிப்பேன்.
22.அப்பப்ப வீட்டை விட்டு வெளியே போ என்பேன்,ஆனா போகக்கூடாது.
23. நான் திட்டும் போதெல்லாம் அழணும்,ஆன கண்ணீர் வரக்கூடாது.
24.அடிக்கடி வெளியே Friends கூட Tour போவேன், எங்கேயும் கூட்டி போகமாட்டேன்.(உடம்பு Tired ஆகி விடும்)
25. எங்க அம்மா எது சாப்பிடக் கொடுக்கிறாங்களோ அது தான் சாப்பிடணும்(விஷத்தையா குடுக்கப் போறாங்க்க!)
இந்த வரன் பிடித்திருந்தால் அடுத்த பதிவில் தெரிவிக்கவும்,பின்னூட்டத்தில் தெரிவித்தாலும் ஏற்றுக்கொள்ளப்படும்.
குறிப்பு: இன்று முக்கால் பங்கு உயர் படிப்பு படித்த பெண்களும் இப்படித்தான்
வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். இன்னும் நிறைய...............

திங்கள், 14 செப்டம்பர், 2009

இது தான் நட்பின் ரகசியமோ?

என் கணவரின் நண்பர் நெடு நாட்களுக்கு பிறகு போன் பண்ணியிருந்தார்.நலம் விசாரித்ததோடு, வேலை எல்லாம் எப்படி போயிகொண்டிருக்கிறது என என் கணவர் கேட்டார்.
நான் இப்போது வேலையை விட்டு விட்டேன்,சினிமா புரொடியூஸ் பண்ணலாம் என இருக்கிறேன். அதற்கு 2 கோடி எஸ்டிமேட் போட்டிருக்கேன்.உங்களுக்கு என்ன தோன்றுகிறது என என் கணவரிடம் கேட்டார். என் கணவரும் நல்ல யோசனை தான்,எனக்கு இது பற்றி அனுபவம் இல்லை. உனக்கு எதாவது உதவி வேண்டும் என்றால் என்னிடம் கேள் என சொன்னார்.
எப்படி அவ்வளவு பணம் புரட்டுவான்,அதுவும் சினிமா வெற்றியடையவில்லையென்றால் என்ன பண்ணுவான் என என் கணவரிடம் கேட்டேன். நீங்க அவனை படம் புரொடியூஸ் பண்ணுவதை பிறகு பாத்துக்கலாம், ஒழுங்கா வேலைக்கு போ என திட்டி புத்தி சொல்லியிருக்கலாமே என் கேட்டேன். அதற்கு அவர் சொன்ன பதில் என்னை சற்று சிந்திக்க வைத்தது.
அவனுக்கு என்ன தோணுதோ அதை அவன் செய்யட்டும், நாம் தடுக்க வேண்டாம். நம்மால் முடிந்த உதவியை செய்வோம் என என் கணவர் சொன்னார்.
உடனே நான் "அப்ப படம் சரியா ஓடலேன்னா .......... "என்றேன். உடனே என் கணவர் "படம் சரியா ஓடிச்சுதுன்னா................."என்றார் சிரித்த படியே.
அவர் கூறியவைகள் என்னை 3 விதமா யோசிக்க வைத்தது.
1. எதையும் Positive-ஆக யோசிக்க வேண்டும்.
2. நண்பனுக்கு உதவ வேண்டும்.
3. நண்பனின் கருத்தை மதிக்க வேண்டும்.
உடனே நான் என் கணவரிடம் சொன்னேன், உங்களுக்கு நிறைய நல்ல நண்பர்கள் இருப்பதற்கு இது தான் காரணமோ என்றேன் சிரித்துக்கொண்டே.

ஞாயிறு, 13 செப்டம்பர், 2009

உங்கள் பதிவு முன்னணி பதிவில் இடம் பெற வேண்டுமா?

1. உங்கள் பதிவு சமுதாய விழிப்புணர்வு ஏற்படுத்தும் பதிவாக இருக்கிறதா?
2. நீங்கள் படிக்கும் பதிவிற்கு கமென்ட்ஸ் எழுதுகீறீர்களா?
3. நீங்கள் படிக்கும் பதிவிற்கு வோட்ஸ் போடுகிறீர்களா?
4. உங்கள் பதிவு வாசகர்கள் ஒருவரையாவது திருத்தியிருக்கிறதா?
5. உங்கள் பதிவு யார் மனதையும் புண்படுத்தாமல் இருக்கிறதா?
6.உங்கள் கருத்துக்கள் ஏற்புடையதாக இருக்கிறதா?
7.உங்களுக்கென தனி எழுத்துப்பாணி இருக்கிறதா?
8. உங்கள் பதிவுகள் காலத்திற்கு ஏற்றார் போல் மாறுபடுகிறதா?
9.நெகட்டிவ் கமென்ஸ் தரும் பதிவர்களை மீது கோபம் இல்லை தானெ?
10.உங்கள் பதிவுகள் உங்களை உணர்வுப்பூர்வமாக பாதித்திருக்கிறதா?
-----------இவை அனைத்திற்கும் உங்கள் பதில் ஆம் என்றால் ,உங்கள் பதிவு முன்னணிப் பதிவு தான், போங்க!
உங்களை பாத்தா எனக்கு பொறாமையா இருக்கு!

புதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு