திங்கள், 6 செப்டம்பர், 2010

என் இணைய உலகம்

தொலைவினால் கருகிப் போன நட்பு
மீண்டும் மலர்ந்தது
 ஆர்குட்டால்!

நான் மட்டும் பார்த்து ரசித்த
என் வீட்டு தோட்டம்
உங்களுக்காக பிகாசாவில்!


என் தெரு மட்டும் கண்டு ரசித்த
தெரு கூத்து
உலகுக்காக யூ ட்யூபில்!


நான் மட்டும் எழுதிக் கிழித்த
கிறுக்கல்கள்
தமிழர்களுகாக ப்ளாகரில்!


என் மூளைக்கு தீனி போட
யாசிக்கிறேன்
கூகிள் ஆண்ட வரை!


புறா விடு தூது தேவையில்லை
இருக்கவே இருக்கு
ஜீ-மெயில் தூது!


கடல் கடந்தும் இலவசமாய் பேச
வசதியாய் இருக்கு
கூகிள் டாக்!

புதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு