வியாழன், 7 ஏப்ரல், 2011

முதியோரை கவனியுங்கள்

நான் ஒவ்வொரு தடவை ஊருக்கு போகும்போதும் எங்கள் உறவினர் வீட்டுக்கு செல்வது வழக்கம்.உறவினரின் பக்கத்து வீட்டில் ஒரு முதியவர் இருந்தார். அவர் எப்போதும் வீட்டிற்கு வெளியே தான் ஒரு கட்டிலில் படுத்திருப்பார்.எந்த தடவை ஊருக்கு போனாலும் அவரை பார்ப்பேன்.இந்த தடவை ஊருக்கு போகும்போது,தாத்தாவையும் காணவில்லை,கட்டிலையும் காணவில்லை
.
என் உறவினரிடம் தாத்தாவை காணோம் எங்கே என்று கேட்டதற்கு; தாத்தா இறந்துட்டாங்க,ரொம்பவே கஷ்டப்பட்டாரு.கண்ணும் தெரியலை,எழும்பவும் முடியாது.படுக்கையிலேயெ தான் டாய்லெட் போயிட்டிருந்தாரு.குளிக்க வைக்க கூட ஆளில்லை.அன்பீய கூட்டத்திலிருந்து தான் பெண்கள் வந்து வாரத்துக்கு ஒரு முறை குளிப்பாட்டினாங்க.உடம்பெல்லாம் ஒரெ ஸ்மெல்,யாரும் பக்கத்துலேயே போகமாட்டாங்க.
பசங்க யாரும் திரும்பி பார்க்கவே இல்ல.அந்த அம்மா(மருமகள்) தான் கொஞ்சமாவது பாத்துது.

அவங்க சொன்னதும் என் கண்களில் கண்ணீர் வந்தது.நான் எதுவும் பேசவில்லை.என்ன இந்த முதுமை;நாளைக்கு நானும் சந்திக்க போகிறேன் என்ற பயத்தில்.

அவங்க வீட்டை பார்த்தால் யாரானாலும் பிரமிச்சு போவாங்க.பசங்க பெரிய வேலையில் இருக்கிறாங்க.ஆனா தாத்தா மழையிலும்,வெயிலிலும்,குளிரிலும் வெளியே தான்.

இது போல எத்தனையோ முதியோர் கடைசியில் கஷ்டப்படுகின்றனர்.

எல்லா இளைஞர்களும் 80 வயதிலும் இளமை நமக்கு மட்டும் கூடவரும் என  நினைக்கின்றனர்.நமக்கு முன்னால் யாராவது 80 வயதில் ஊன்றுகோலில்லாமல் இருந்ததுண்டா ? இல்லையே.
எங்க ஊருல ஒரு பழமொழி சொல்வாங்க,"பழுத்த இலை விழும்போது பச்சை இலை சிரிக்குமாம்"

இன்றைய இளைஞர்கள் நாளைய முதியவர்கள். இது ஒவ்வொரு இளைஞர் மனதில் இருந்தால் போதும் என நினக்கிறேன்.

உங்க அம்மா அப்பா தாத்தா,பாட்டி கூட நேரம் செலவிடவில்லையென்றால் என்ன,நீங்கள் உங்கள் கல்லூரியில் நடந்தவற்றை சொல்லுங்கள்.கடைசியில் பார்த்த சினிமா பற்றி பேசுங்க.அவங்க உடல் நலனை விசாரியுங்கள்.உடனே அவர்களும் அவங்களுக்கும் ஒரு இலமை இருந்ததை உங்களுக்கு சொல்லுவார்கள். 

புதன், 6 ஏப்ரல், 2011

உரசல்கள்

நானும் தாய் மடியில்
தவழ்ந்த காலங்கள்
இன்று என் கண்முன்னெ
மங்கிய பிம்பங்க்ளாய்!

நடக்க கற்றுக் கொடுத்த
என் தாத்தாவிற்கு நானெ
 ஊன்றுகோலாய்ப் போன காலங்கள்

மீனென நினைத்து தலைபிரட்டையை
கண்ணாடி பாட்டிலில் வளர்த்தது

பக்கத்து வீட்டு நண்பர்களுடன்
நீர் வற்றிய குளத்தில்
கபடி விளையாடியது

இன்று மழை வருமா? வராதா?
இது என் அப்பாவின் கவலை
எனக்கோ
இன்று
கணக்கு வகுப்பில்
அடி கிடைக்குமா? கிடைக்காதா?

ஒற்றை மைனா பார்த்தால்
அடி கிடைக்குமாம் என
இரட்டை மைனா தேடி
சோலைக்கு போன ஞாபகம்

பெப்சியும் கோக்கும்
ருசித்ததில்லை
பதநீருக்கும்,இளனீருக்கும் பஞ்சமில்லை

காதல் நோயில் விழுந்தெழுந்தேன்
இளமை என்னையும் விடவில்லை!




புதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு