புதன், 7 அக்டோபர், 2009

மதம் நமக்கு என்ன செய்தது?

இன்று நாட்டில் நடக்கும் அனைத்து வன்முறைகளுக்கும் காரணம் மதம் தான்! இது அனைவரும் அறிந்த ஒன்று,என்றாலும் நாம் மதம் தான் காரணம் என்று வெளிப்படையாகச் சொல்வது இல்லை.ஏன் நாம் சொல்ல தயங்குகிறோம்? ஏன் கடவுள் நம்மிடம் கோபித்துவிடுவாரோ என்ற பயம் தான்!

எதற்கு நாம் பயப்படவேண்டும்? எதெற்கு இந்த மதபிரிவினை? நீ முஸ்லீம்,நான் கிறிஸ்தவன்,அவன் இந்து என்று நாமாகவே ஏன் பிரித்து வைத்து கொள்கிறோம்? ஏதற்கு இந்த குண்டு வெடிப்புகள்? எதற்கு இந்த வன்முறைகள்? எதெற்கு இந்த அறிவியல் விஞ்ஞானத்தை அழிவிற்கு பயன்படுத்துகிறோம்?

மனிதனை மதம் பிடிக்க வைக்கிற மதவாதம் தான் இதற்க்கேல்லாம் ஒரே விடை.

மதம் நம்மை நல்வழிபடுத்த உருவாக்கப்பட்ட ஓன்று. அதனை நாம் தீவினைகளுக்கு பயன்படுத்துகிறோம்.

ஏன் நீ எந்த கடவுளையாவது வழிபடு, பக்கதது வீட்டுக்காரன் யாரை வழிபடுகிறான் என எதற்கு பார்க்கிறாய்? உங்கள் இருவரின் இரத்தமும் ஓன்று தானே! நிறத்தில் வேறுபாடு இருக்கிறதா சொல்? இருவரின் கண்ணீரும் துவர்ப்பு தானே! உன் உயிர் காக்க ஏன் ஒரு முஸ்லீம் இரத்தம் தந்து உதவுவதில்லையா? மனிதனேயம் இருந்தால் போதும் மனிதனுக்கு!மதனேயம் உன் வாசல்படியுடன் நிற்கட்டும்.
இன்று மதங்கள் நீ கிறிஸ்தவன்,நான் முஸ்லீம், அவன் இந்து என மட்டுமே கற்றுதந்திருக்கிறது.ஏனோ நாம் மனிதர்கள் என்பதை கற்று தர மறந்துவிட்டது.
இன்று மதங்கள் புனித நூலைத் தூக்க வேண்டிய கைகளை துப்பாக்கி தூக்க பழக்குகிறது.
இன்று மதங்கள் அன்பை போதிக்கவேண்டிய தருணத்தில மதவாதத்தை போதிக்கிறது.
இன்று மதஙகள் சகோதரத்துவத்தை எடுத்துரைக்க வேண்டியதை மறந்து பிரிவினையை ஞாபகப்படுத்துகிறது.
இந்த பதிவு யாரையும் புண்படுத்தும் நோக்கில் அல்ல.

ஒன்றே குலம்
ஒருவனே தேவன்
மதவாதம் வேண்டாமே!
மனிதநேயம் காப்போமே!

3 comments:

ரைட்டு பாஸ்! அப்படியே செஞ்சிடுவோம்!!

ஏனோ நாம் மனிதர்களாய் பிறந்ததால்தான்....

கடைசிவரிகள் நூற்றுக்கு நூறு உண்மை....

சூப்பரா சொல்லீருக்கீங்க. மிகச்சரியான வரிகள்.

ஒன்றே குலம்
ஒருவனே தேவன்
மதவாதம் வேண்டாமே!
மனிதநேயம் காப்போமே!

:)

கருத்துரையிடுக

பிடித்தால் ஓட்டு போட்டு பிரபலமாக்குங்கள்! படித்தால் பின்னூட்டமிட்டு ஊக்கமளியுங்கள்!!

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு