புதன், 4 நவம்பர், 2009

புது மொபைல் வாங்கிட்டேன்

               கடந்த சனிக்கிழமை என் கணவரின் நண்பன் (நண்பன் என்று சொல்தை விட உடன் பிறவா தம்பி என்று சொல்வது தான் சரி.)  வீட்டிற்கு வந்திருந்தார்.எப்போது அவன் வீட்டிற்கு வந்தாலும் என்னப்பா மொபைல் மாத்திட்டியா? என் கேட்டு கிண்டலடிப்பது வழக்கம். இந்த தடவையும் என்னப்பா மொபைல் மாத்திட்டியா எனச் சிரித்துக்கொண்டே கேட்டேன்.

             என்ன அண்ணி "அந்த கொடுமையை எப்படி சொல்ல",என்று சலித்துகொண்டே புது மொபைலை காட்டினான்.அபபாடா இப்பவாவது புது மொபைல் வாங்கினியே;என்றேன் சிரித்துக்கொண்டே.பழைய மொபைல தீபாவளிக்கு ஊருக்கு போகும்போது பஸ்ல எவனோ திருடிட்டான்.மொபைல் இல்லாம ஆபீஸ்ல எதுவும் வேலை செய்ய முடியாது அதனால புதுசா  ஒரு மொபைல் வாங்கியிருக்கேன் என்றான்.

 பஸ்லயா,எப்படியப்பா திருட்டு போச்சு என்றேன்.

       நைட் 12 மணிக்கு ஒரு SMS வந்தது:அதை படிச்சிட்டு,மொபைல கையில வச்சிகிட்டே தூங்கிட்டேன். முழிச்சு பாத்தா மொபைல காணோம்.பஸ்ல கண்டக்டர்ட சொன்னேன்.பக்கத்துல இருந்தவன செக் பண்ணி பார்த்தார்,அவன் எடுக்கவில்லை என்றான்.எனக்கு அவன் தான் எடுத்திருப்பான் என தோன்றுகிறது என சொல்லி சங்கடப்பட்டான்.

வாங்கி எவ்வளவு நாளாச்சு என்றேன்.

          அது வாங்கி இரண்டரை வருஷமாச்சு அண்ணி,முரளியிடமிருந்து செகண்ட் ஹேண்டா, 2200 ரூவாக்கு வாங்குனது.நல்ல மொபைல் தொலஞ்சு போச்சு என்றான் (மொபைல் லட்சணம் எனக்கு தான் தெரியும்  Number Display ஆகாது, Key Pad ஐ பூதக்கண்ணாடி வைத்து தான் பார்க்கணும்)

எனக்கு இதை கேட்டதும் சிரிப்பு தான் வந்தது. எப்படியோ புது மொபைல் வாங்கிட்ட என்றேன் சிரித்துகொண்டே.

0 comments:

கருத்துரையிடுக

பிடித்தால் ஓட்டு போட்டு பிரபலமாக்குங்கள்! படித்தால் பின்னூட்டமிட்டு ஊக்கமளியுங்கள்!!

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு