புதன், 6 ஏப்ரல், 2011

உரசல்கள்

நானும் தாய் மடியில்
தவழ்ந்த காலங்கள்
இன்று என் கண்முன்னெ
மங்கிய பிம்பங்க்ளாய்!

நடக்க கற்றுக் கொடுத்த
என் தாத்தாவிற்கு நானெ
 ஊன்றுகோலாய்ப் போன காலங்கள்

மீனென நினைத்து தலைபிரட்டையை
கண்ணாடி பாட்டிலில் வளர்த்தது

பக்கத்து வீட்டு நண்பர்களுடன்
நீர் வற்றிய குளத்தில்
கபடி விளையாடியது

இன்று மழை வருமா? வராதா?
இது என் அப்பாவின் கவலை
எனக்கோ
இன்று
கணக்கு வகுப்பில்
அடி கிடைக்குமா? கிடைக்காதா?

ஒற்றை மைனா பார்த்தால்
அடி கிடைக்குமாம் என
இரட்டை மைனா தேடி
சோலைக்கு போன ஞாபகம்

பெப்சியும் கோக்கும்
ருசித்ததில்லை
பதநீருக்கும்,இளனீருக்கும் பஞ்சமில்லை

காதல் நோயில் விழுந்தெழுந்தேன்
இளமை என்னையும் விடவில்லை!




1 comments:

ஃஃஃஃஒற்றை மைனா பார்த்தால்
அடி கிடைக்குமாம் என
இரட்டை மைனா தேடி
சோலைக்கு போன ஞாபகம்
ஃஃஃஃ

அருமையான வரிகள்..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
ஆணுறை பாவிப்போரே பெரும் ஆபத்து காத்திருக்கிறது (18+) condom

கருத்துரையிடுக

பிடித்தால் ஓட்டு போட்டு பிரபலமாக்குங்கள்! படித்தால் பின்னூட்டமிட்டு ஊக்கமளியுங்கள்!!

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு