புதன், 11 நவம்பர், 2009

கெஞ்சல்கள்

என் முந்தைய பதிவை வாசித்த,ஓட்டளித்த,பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி.

ஆப்பிள் கன்னமுடையவளே
என் அழகு தேவதையே
நீ சிரிக்கும்போது விழும்
கன்னக் குழிகளை
பார்வையால் முத்தமிடு என
என் கண்கள் கெஞ்சுகிறது!

உன் கயல்விழி கழுகுப்பார்வை
என்னை சற்று மிரட்டினாலும்
அவள் கருவிழி
 பிம்பத்துக்காய் காத்திரு என
என் உள்ளம் கெஞ்சுகிறது!

நீ சுமந்து வரும்
மல்லிகை பூ வாசம்
மாசில்லாத ஆக்ஸிஜனாம்
இன்னும் சுவாசித்துவிடு என
என் நுரையீரல் கெஞ்சுகிறது!

எனக்கென்னமோ சந்தேகமாயிருக்கிறது
அவளென்ன மெழுகுச் சிலையோ
அருகில் போய்
 தொட்டுப் பார் என
என் கைகள் கெஞ்சுகிறது!

இப்படி எத்தனை நாள் தான்
கவிதை வடிப்பாய்
உன் இதயக்கோவிலுக்குள்
அவளுக்கு விளக்கேற்று என
 என் இதயம் கெஞ்சுகிறது!

0 comments:

கருத்துரையிடுக

பிடித்தால் ஓட்டு போட்டு பிரபலமாக்குங்கள்! படித்தால் பின்னூட்டமிட்டு ஊக்கமளியுங்கள்!!

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு