செவ்வாய், 10 நவம்பர், 2009

ஸாரி(Sorry) கேட்ட நெட்வொர்க்கிங் Mam!

    என்   முந்தைய பதிவை வாசித்த,வாக்களித்த,கருத்துரையிட்ட அனைவருக்கும் நன்றி!       
      நான் MSc. படித்துகொண்டிருக்கும் போது, எங்கள் networking paper எடுத்த பேராசிரியை ரொம்பவே Strict.அவர் வகுப்பு என்றாலே எங்களுக்கு தூக்கம் வரும்.தினமும் ஒரு மாணவனையாவது வகுப்பிலிருந்து வெளியேற்றாமல் வகுப்பு நடத்தியதில்லை.
அவர் வகுப்பு நடத்தும் போது எல்லோரும் அவர் முகத்தையே பார்த்துக்கொண்டிருக்கவேண்டும்,லேசாகத் திரும்பினாலும் ,உடனே வெளியே அனுப்பி விடுவார்.வெளியே அனுப்புவது மட்டும் என்றால் வகுப்பே வெளியே போக ரெடியாயிருந்திருக்கும்.ஆனால் வெளியே அனுப்பும் student க்கு அட்டென்டன்ஸ்-ம் கிடையாது.
அட்டென்டன்ஸ்க்கு பயந்து எப்படியாவது அவங்க முகத்தை பார்த்துக்கொண்டே இருப்போம்.
      ஒரு நாள் அவங்க பாடம் நடத்திகொண்டிருந்த வேளையில் ஒரு தடவை திரும்பி ஜன்னலைப் பார்த்தேன்.அவ்வளவு தான் என்னிடம் ஒரு கேள்வி கேட்டாங்க,எனக்கு விடை தெரியவில்லை.நான் பேசாமல் நின்றேன். வெளியே போ என்றாங்க. நானும் மறுபேச்சு பேசாமல் வெளியே போனேன்.வகுப்பே அமைதியானது;ஏனென்றால் என்னுடைய முகவரி வகுப்பில் உள்ள் ஒருவருக்கு கூடத் தெரியாது.அப்படி பட்ட சுபாவம் உள்ளவள் நான்,வகுப்பில் பக்கத்தில் இருக்கும் மாணவியுடன் கூட பேசியதில்லை.எனக்கும் மனதுக்குள் ரொம்பவே கவலையாக இருந்தது.
         மறுநாள் காலையில் கம்ப்யூட்டர் லேப் இருந்தது.இதே மேம் தான் எனக்கு Lab Incharge.நான் Practical செய்து கொண்டிருக்கும் போது என்னருகில் வந்து ப்ரொக்ராம்ஸ் போட்டாச்சா என கேட்டாங்க.ஆம் என என் Practical Note ஐ காட்டினேன்.சரி சரி அப்புறம் பார்க்கிறேன்.நீ கிறிஸ்டியனா? என்று கேட்டானங்க.ஆமா என்றேன்.
"நேற்றைக்கு உன்ன வகுப்பிலிருந்து வெளியே அனுப்பினதுக்கு சாரிம்மா"என்றாங்க.எனக்கு ஒரே ஆச்சரியம்.நோ ப்ராப்ளம் மாம் என்றேன் சிரித்துக்கொண்டே!.
மேம் சாரி கேட்ட விஷயம் Computer Depaartment ஐ ஆச்சரியப்பட வைத்தது.

1 comments:

ஒன்னுமே புரியல... ஏன் உங்ககிட்ட மட்டும் சாரி கேட்டாங்க?

கருத்துரையிடுக

பிடித்தால் ஓட்டு போட்டு பிரபலமாக்குங்கள்! படித்தால் பின்னூட்டமிட்டு ஊக்கமளியுங்கள்!!

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு