வெள்ளி, 16 அக்டோபர், 2009

முதல் ரேங்க் உங்கள் குழந்தை எடுக்கவில்லை என கவலைப்படுகிறீர்களா?

என்னோட தங்கை ஒரு நாள் திடீரென ஃபோன் பண்ணினா.எனக்கு ஒரே ஆச்சரியம்,ஏன்னா அவ ஒரு நாள் கூட ஃபோன் பண்ணியதே இல்ல,எப்போதும் நான் தான் பண்ணுவேன். என்ன ஃபோன் பண்ணியிருக்க என்ன பிரச்சினை என பதற்றத்துடன் கேட்டேன்.
எம் பொண்ணு இந்த முறை 15 ஆவது ரேங்க் எடுத்திருக்கா, எனக்கு ஒரே பதற்றமா இருக்கு என்றாள்.இது தானா விசயம்,என சற்று நிம்மதியடைந்தேன்.
அவ பொண்ணு என்ன படிக்கிறாண்ணு தெரிங்ஞ்சுகிட்டா நீங்களே வருத்தப்படுவீங்க வெறும் LKG தான்!.எவ்வளவு சதவீதம் மதிப்பெண் எனக் கேட்டேன், வெறும் 83 சதவீதம் தான், என்ன பண்ண என ஒரே கவலையுடன் சொன்னாள்.
போன தடவ 7-வது ரேங்க்.இப்ப 15 என ஒரே குமுறல் தான் அவள்.எனக்கு வந்த கோபத்துக்கு அளவே இல்ல.
சரி நீ ஒண்ணும் கவலப் படாத,அவ நல்ல சதவீதம் மார்க் எடுத்திருக்கா,அவ முதல் ரேங்க் எடுக்கணும்னு நீ ஆசப்படுறது தப்பு.நீ அவளை அடிக்கவோ, திட்டவோ செய்யாத, நீ எப்பவுமே அவளிடம் முதல் ரேங்க் எடுக்கணும்னு சொல்வத விட,மக்கள் இப்ப இவ்வளவு சதவீதம் மதிப்பேண் எடுத்திருக்க,மக்கள் நல்லா படிக்கிற என அவளை பராட்டு. அடுத்த தடவை இதை விட கொஞ்சம் அதிகம் மதிபபெண் எடுக்கணும் என புரியும் படியாகச் சொல்லு என அறிவுரை சொன்னேன்.
மேலும் எப்பவுமே குழந்தைய அடுத்த குழந்தையுடன் போட்டி போட வைக்காதே;அதனால குழந்தைக்கு அடுத்த குழந்தை மீது வெறுப்பு தான் வரும்,மேலும் போறாமை,போட்டி மனப்பான்மை,கோபம் என பல கெட்ட குணங்கள் வரும்.அது தவிர  ,தாழ்வுமனப்பான்மை,மன அழுத்தம் என  மனவியல் ரீதியாகவும் குழந்தை பதிக்கப்பட வாய்ப்பிருக்கு.எனவே அவளுக்கு போட்டி மனப்பான்மையை ஊட்டாதே. அவளுக்குள்ளேயே ஒரு போட்டி மனப்பான்மையை உருவாக்கு என அட்வைஸ் பண்ணினேன். உம் என சொல்லிவிட்டு ஃபோனை கட் பண்ணினாள்.
ஓடித்திரிய வேண்டிய வயதில ரேங்க் எடு எடுன்னா எப்படிங்க முடியும்?
இது போல நிறைய தாய்மார்கள் இன்று தேவை இல்லாமல் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார்கள், இந்த பதிவு அவர்களுக்கு பயனளிக்கும் என நினைக்கிறேன்.

1 comments:

இக் காலத்திற்கு மிகத் தேவயான கருத்து

கருத்துரையிடுக

பிடித்தால் ஓட்டு போட்டு பிரபலமாக்குங்கள்! படித்தால் பின்னூட்டமிட்டு ஊக்கமளியுங்கள்!!

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு