சனி, 25 ஜூலை, 2009

இதுதாங்க காதல்

என் உறவினர் ஒருவர் பத்தாம் வகுப்பு படிக்கும்போது வகுப்பில் படிக்கும் பெண்ணை விரும்பியுருக்கிறார். இருவர் மனமும் பல பட்டாம்பூச்சிகளை பறக்கவிட, காதல் வானில் பறந்தனர்.
இது பெண்ணின் வீட்டுக்கு தெரியவர, வீட்டில் சூறாவளிக் காற்றடிக்க,அவள் பள்ளிப்படிப்பை நிறுத்திவிட்டாள்.இவரோ கொஞ்சவும் மனம் தளராமல் எப்படியாவது அவளுக்குக் கணவனாக வேண்டும் என்ற வெறியிலே நன்றாகப் படித்து அரசாங்க உத்தியோகத்திலும் அமர்ந்த்துவிட்டார். இப்போது கொஞ்சம் நிம்மதி, இனி அவள் அப்பாவிடம் போயி பெண் கேட்கவேண்டும். எப்படியானாலும் இனி அவள் நமக்கு தான் என்ற முடிவில் பெண் கேட்டிருக்கிறார்.
இரு வீட்டார் ஆசிர்வாதத்துடன் திருமணம் நடந்தது. அவள் நான்கு குழந்த்தைகளுக்கு தாயாகி,இப்போது பாட்டியாகக் காத்துக்கொண்டிருக்கிறார்.
நானே நேராகவேப் பார்க்கிறேன்,வருடம் முப்பது ஓடியும், இன்றும் புதுமணத் தம்பதியராகவே மகிழ்ச்சியாகவே இருக்கின்றனர்.
காதல் தோல்வி எனத் தாடி வளர்த்துக்கொண்டிருகிறவர்கள் ,இது போல் வாழும் காதலை பார்த்து ,காதலியை கைபிடிக்கலாமே.
உண்மை காதல் வாழ்க! இந்த தம்பதியர் பல்லாண்டு காலம் மனமொத்து வாழ வாழ்த்துக்கள்.


1 comments:

காதலில் உறுதியாக இருக்க வேண்டும்!! உண்மைதாங்க!!

கருத்துரையிடுக

பிடித்தால் ஓட்டு போட்டு பிரபலமாக்குங்கள்! படித்தால் பின்னூட்டமிட்டு ஊக்கமளியுங்கள்!!

புதிய இடுகை முகப்பு