வியாழன், 30 ஜூலை, 2009

என் தோழியிடம் பிடிக்காத பத்து

1 மாசத்துல ஒரு நாள் மறக்காம Missed Call கொடுப்பா.
2 என்னாச்சு என பதறியடித்து போன் பண்ணினா No answer என பதில் வரும்
3 எப்படி இருக்கே என கேட்டால் நல்ல இருக்கிறியா எனக் கேட்டு வெறுப்பேத்துவாள்.
4 என்றைக்காவது அவள் போன் எடுத்தால் இன்னொரு கால் வருது என போனைக் கட் பண்ணுவாள்.
5 நேரில் பார்த்தால் ஒரு புன்முறுவலுடன் நிறுத்திக்கொள்வாள்
6 e-Mail போட்டால் படித்துவிட்டு reply அனுப்பமாட்டாள்
7 எப்ப பார்த்தாலும் சாதிக்கணும் என்பாள், ஆனா இன்னும் எதையும் சாதிச்ச்தில்லை
8 எனக்கு பிடித்த உணவைப்பற்றி பேசினா ,கோலஸ்ரால் ,heart attack அது இது என டாக்டர் போலப் பேசுவா
9. ரூம்ல எப்பப் பார்த்தாலும் தூங்கிக்கிட்டே இருப்பா
10 அவளோட பொருளை யாரையும் தொடவிடமாட்டா
(இது கற்பனை அல்ல நிஜம் )


சனி, 25 ஜூலை, 2009

இதுதாங்க காதல்

என் உறவினர் ஒருவர் பத்தாம் வகுப்பு படிக்கும்போது வகுப்பில் படிக்கும் பெண்ணை விரும்பியுருக்கிறார். இருவர் மனமும் பல பட்டாம்பூச்சிகளை பறக்கவிட, காதல் வானில் பறந்தனர்.
இது பெண்ணின் வீட்டுக்கு தெரியவர, வீட்டில் சூறாவளிக் காற்றடிக்க,அவள் பள்ளிப்படிப்பை நிறுத்திவிட்டாள்.இவரோ கொஞ்சவும் மனம் தளராமல் எப்படியாவது அவளுக்குக் கணவனாக வேண்டும் என்ற வெறியிலே நன்றாகப் படித்து அரசாங்க உத்தியோகத்திலும் அமர்ந்த்துவிட்டார். இப்போது கொஞ்சம் நிம்மதி, இனி அவள் அப்பாவிடம் போயி பெண் கேட்கவேண்டும். எப்படியானாலும் இனி அவள் நமக்கு தான் என்ற முடிவில் பெண் கேட்டிருக்கிறார்.
இரு வீட்டார் ஆசிர்வாதத்துடன் திருமணம் நடந்தது. அவள் நான்கு குழந்த்தைகளுக்கு தாயாகி,இப்போது பாட்டியாகக் காத்துக்கொண்டிருக்கிறார்.
நானே நேராகவேப் பார்க்கிறேன்,வருடம் முப்பது ஓடியும், இன்றும் புதுமணத் தம்பதியராகவே மகிழ்ச்சியாகவே இருக்கின்றனர்.
காதல் தோல்வி எனத் தாடி வளர்த்துக்கொண்டிருகிறவர்கள் ,இது போல் வாழும் காதலை பார்த்து ,காதலியை கைபிடிக்கலாமே.
உண்மை காதல் வாழ்க! இந்த தம்பதியர் பல்லாண்டு காலம் மனமொத்து வாழ வாழ்த்துக்கள்.


புதிய இடுகைகள் முகப்பு